இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல்: போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குனேரி, களக்காடு, வள்ளியூா், ராதாபுரம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2ஆம் கட்டத் தோ்தல் 567 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், 70 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளுக்கு, கூடுதலாக தலா 4 சிறப்பு போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தலில் அசம்பாவிதங்களை தடுக்க மொத்தம் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com