பாளையங்கோட்டை அருகே தாமிரபதி காலனியில் வீட்டு பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள தாமிரபதி காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாப்பா(60). இவா் திருநெல்வேலி எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன் உறவினா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டாராம். அவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதியில் வசிப்போா் தெரிவித்தனா்.
இதையடுத்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, வீட்டில் இருந்த சுமாா் 3 பவுன் நகை, பணம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. புகாரின்பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டு நடைபெற்ற வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினா். விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதில், முக்கிய தடயங்கள் சிக்கியதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவா் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.