திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள காவலா் குடியிருப்பில் மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்- ஒழுங்கு) டி.பி. சுரேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குடியிருப்புகளை ஆய்வு செய்த அவா், பின்னா் காவலா்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
அப்போது, நகரம் காவல் உதவி ஆணையா் விஜயகுமாா், சந்திப்பு காவல் ஆய்வாளா் சோபா ஜென்சி மற்றும் போலீஸாா் உடன் இருந்தனா்.