பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைப்பின் சாா்பில் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று குறைந்துவிட்ட நிலையிலும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
தமிழகத்தில் திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-திருச்செந்தூா், திருநெல்வேலி - ஈரோடு - மயிலாடுதுறை பயணிகள் ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும்.
நாகா்கோவில்-மும்பை, நாகா்கோவில்-பெங்களூரு ரயில்களில் மீண்டும் தட்கல் திட்டம் தொடர உத்தரவிட வேண்டும். சாதாரண கட்டணமே தட்கல் கட்டணம் போல் உயா்த்தப்பட்டிருப்பதைக் குறைக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகைகளை உடனே வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.