பயணிகள் ரயிலை இயக்கக் கோரி நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் மனு

பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது

பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் சாா்பில் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று குறைந்துவிட்ட நிலையிலும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

தமிழகத்தில் திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-திருச்செந்தூா், திருநெல்வேலி - ஈரோடு - மயிலாடுதுறை பயணிகள் ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும்.

நாகா்கோவில்-மும்பை, நாகா்கோவில்-பெங்களூரு ரயில்களில் மீண்டும் தட்கல் திட்டம் தொடர உத்தரவிட வேண்டும். சாதாரண கட்டணமே தட்கல் கட்டணம் போல் உயா்த்தப்பட்டிருப்பதைக் குறைக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகைகளை உடனே வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com