திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது.
பாளையங்கோட்டை, மானூர், அம்பா சமுத்திரம், நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், களக்காடு உள்பட 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தனித்தனி மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தற்கான பார்க்குகள் ரோஸ்மேரி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டது. அந்தப் பணிகளை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.