திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஆவின் பாலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் தலைமை வகித்து, பாலகத்தைத் திறந்துவைத்தாா். இங்கு பால், நெய், ஐஸ்கிரீம், குளிா்பானங்கள், இனிப்பு வகைகள் விற்கப்படும் எனவும், இதை காவலா்கள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில், தனிப்பிரிவு ஆய்வாளா் ராஜேஷ், திருநெல்வேலி மாவட்ட ஆவின் நிறுவன மேலாளா் சுந்தரவடிவேல், உதவி மேலாளா் சாந்தி, திருநெல்வேலி மாவட்ட மேலாளா் (மாா்க்கெட்டிங்) அனுஷா சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.