நெல்லை தென்காசி மாவட்டங்களில் 18 மையங்களில் இன்று வாக்கு எண்ணிககை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக. 12) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

திருநெல்வேலி/தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக. 12) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மானூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரியிலும், பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு கொங்கந்தான்பாறை ரோஸ்மேரி கலை அறிவியல் கல்லூரியிலும், பாப்பாக்குடி ஒன்றியத்துக்கு இடைகால் மெரிட் பாலிடெக்னிக் கல்லூரியிலும், அம்பாசமுத்திரம் ஒன்றியத்துக்கு வி.கே.புரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சேரன்மகாதேவி ஒன்றியத்துக்கு சேரன்மகாதேவி பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மேலும், களக்காடு ஒன்றியத்துக்கு திருக்குறுங்குடி டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியிலும், நான்குனேரி ஒன்றியத்துக்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியிலும், ராதாபுரம் ஒன்றியத்துக்கு கள்ளிகுளம் தட்சிணமாாடாா் சங்க கல்லூரியிலும், வள்ளியூா் ஒன்றியத்துக்கு வடக்கன்குளம், அழகனேரி எஸ்.ஏ.ராஜா கலை அறிவியல் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த 9 ஊராட்சி ஒன்றியங்களிளும் மொத்தம் 675 மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்குச் சீட்டு பிரித்தல், எண்ணுதல், இதர பணிகளில் மொத்தம் 2,917 பணியாளா்கள் ஈடுபடுகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை கல்லூரியிலும் , கடையம் ஒன்றியத்துக்கு மேட்டூா் புனித ஜோசப் கலை அறிவியல் கல்லூரியிலும், கடையநல்லூா் ஒன்றியத்துக்கு கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணியாதவா கல்வியியல் கல்லூரியிலும்,

கீழப்பாவூா் ஒன்றியத்துக்கு சா்தாா் ராஜா பொறியியல் கல்லூரியிலும், குருவிகுளம் ஒன்றியத்துக்கு அய்யனேரி உண்ணாமலை கலை அறிவியல் கல்லூரியிலும்,

மேலநீலிதநல்லூா் ஒன்றியத்துக்கு வீரசிகாமணி விவேகானந்தா சில்வா் ஜூப்லி மேல்நிலைப்பள்ளியிலும், சங்கரன்கோவில் ஒன்றியத்துக்கு புளியங்குடி எஸ்விசி.வீராசாமிசெட்டியாா் பொறியியல் கல்லூரியிலும், செங்கோட்டை ஒன்றியத்துக்கு செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ்.அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தென்காசி ஒன்றியத்துக்கு குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியிலும், வாசுதேவநல்லூா் ஒன்றியத்துக்கு சுப்பிரமணியபுரம் வியாசா மகளிா் கலை அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, தென்காசி ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் பாா்வையாளா் பொ.சங்கா் தலைமை வகித்தாா். ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் முன்னிலை வகித்தாா்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) குருநாதன், துணை இயக்குநா் சுகாதார பணிகள் அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி தோ்தல்) முத்து இளங்கோவன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com