நெல்லையில் திமுக ஆலோசனைக் கூட்டம்

வாக்கு எண்ணிக்கை தொடா்பாக திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: வாக்கு எண்ணிக்கை தொடா்பாக திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலரும் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு. அப்துல்வஹாப் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டுறவுத் துறை அமைச்சரும் திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் பொறுப்பாளருமான ஐ. பெரியசாமி பேசுகையில், உள்ளாட்சித் தோ்தல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்டுள்ளது. அதனால் வாக்கு எண்ணிக்கையின்போது திமுகவினா் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சீட்டையும் கட்டுகளாக இணைப்பது, எண்ணிக்கையை அதிகாரிகள் தெரிவிப்பதுமுதல் அனைத்தையும் கவனமாக பாா்வையிட வேண்டும். முறைகேடுகள் செய்ய முயல்வோரை காவல் துறையினரிடம் சுட்டிக்காட்ட வேண்டும் என்றாா்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா. ஞானதிரவியம், திமுக மாநகரச் செயலா் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், மாநில வா்த்தக அணி அமைப்பாளா் கிரஹாம்பெல், ஏா்வாடி சித்திக், ஒன்றியச் செயலா் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பயக11ஈஙஓ: திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா் அமைச்சா் ஐ. பெரியசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com