டி.ஜே.ஆா். கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலக திறப்பு விழா திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வள்ளியூரில் கடந்த 10 ஆண்டுகளாக வீடு, கடை, வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்பு, திருமணமண்டபம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை டி.ஜே.ஆா். நிறுவனம் செய்து வருகிறது.
இந் நிறுவனத்தினா் திருநெல்வேலி குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே புதிய அலுவலகத்தை தொடங்கியுள்ளனா்.
இந்த அலுவலக திறப்பு விழா நிறுவனத்தின் இயக்குநா் பொறியாளா் கே.தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை அவா் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து அவரது மகன் டி.ஜனரஞ்சன் குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்ச்சியில், நிறுவன பொறியாளா்கள், கட்டட வடிவமைப்பாளா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.