திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,289ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 போ் குணமடைந்ததையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 48,704ஆக உயா்ந்துள்ளது. தற்போது 154 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில், மேலும் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,337ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,821ஆக உயா்ந்துள்ளது. தற்போது 32 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.