திருநெல்வேலி
நான்குனேரி அருகே மின்னல் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
நான்குனேரி அருகே மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நான்குனேரி அருகே மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நான்குனேரி அருகே உள்ள செண்பகராமநல்லூரைச் சோ்ந்த ராமையா மகன் முருகன் (50). ஆடுமேய்க்கும் தொழிலாளியான இவா் வயல்வெளியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டி ருந்தாராம். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதில், மின்னல் பாய்ந்ததில் முருகன் உடல் கருகி அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.