திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி, உடையாா்பட்டி பகுதியைச் சோ்ந்த நெல்லையப்பன் மகன் இசக்கி சுப்பையா தாஸ் (23). இவா் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாம். இவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ்குமாா், நகரம் உதவி ஆணையா் விஜயகுமாா், சந்திப்பு காவல் ஆய்வாளா் ஷோபா ஜென்சி ஆகியோா் பரிந்துரைத்ததையடுத்து, மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்படி இசக்கி சுப்பையா குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.