திருநெல்வேலி அருகே மானூா், கங்கைகொண்டான் அரசு பள்ளிகளில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் அறிவுரையின்பேரில், கங்கைகொண்டான் காவல் ஆய்வாளா் பெருமாள் தலைமையில் அங்குள்ள அரசு பள்ளி, மானூா் காவல் உதவி ஆய்வாளா் பழனி தலைமையில் போலீஸாா் மானூா் அரசுப் பள்ளியிலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவா், மாணவிகளிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். அப்போது, பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.