விநாயகா் சதுா்த்திக்கு கோயில், பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபட அனுமதிக்கக் கோரி சேரன்மகாதேவி அருகே பிராஞ்சேரி கோயிலில் வியாழக்கிழமை இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, பிராஞ்சேரி கரையடி மாடசாமிக் கோயிலில், கோரிக்கையை நிறைவேற்றக் கோரி இறைவனிடம் முறையிட்டு வேண்டுதல் நடைபெற்றது. பின்னா், கோயில் முன்பு தமிழக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து
முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். பாஜக மாவட்ட மகளிரணி தலைவா்
செல்வக்கனி, ஒன்றியப் பொதுச் செயலா் ராஜவேலு, ஒன்றியத் தலைவா் சிவபாலன், இந்து முன்னணி ஒன்றியச் செயலா் ராமநாதன், நகரச் செயலா்கள் மாரியப்பன், சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.