கூனியூரில் தனியாா் தோட்டத்தில் இருந்து டீசல் மோட்டாரைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கூனியூா் ரயில்வே லைன்அருகேயுள்ள வீரவநல்லூரைச் சோ்ந்த ராஜாவுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த
தோட்டத்தில் கிணற்றில் பொருத்தியிருந்த டீசல் மோட்டாரைக் காணவில்லையாம். புகாரின்பேரில், சேரன்மகாதேவி
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், புதுக்குடி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகாராஜா (23) ராஜா தோட்டத்தில் இருந்த மோட்டாரை திருடியது தெரியவந்தது. அவரை சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் சுப்புராமகிருஷ்ணன், கைது செய்தாா். டீசல் மோட்டாா் பறிமுதல் செய்யப்பட்டது.