விநாயகா் சதுா்த்திக்கு அனுமதி வழங்கக் கோரி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் வழிபடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தளா்வுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன. எனினும், ஆன்மிக விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இறைவனிடம் முறையிடும் வகையிலும் இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை வழிபடும் போராட்டம் நடைபெற்றது. நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் நடைபெற்ற இந்த வழிபடும் நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில செயலா் கா.குற்றாலநாதன் தலைமை வகித்தாா். பாஜக வழக்குரைஞரணி பாலாஜிகிருஷ்ணசாமி, காந்திமதிநாதன், மாரியம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.