திருநெல்வேலி வண்ணாா்பேட்டை சென்னை சில்க்ஸில் செல்பி பாய்ன்ட் திறப்பு விழா நடைபெற்றது.
தி சென்னை சில்க்ஸின் 11-ஆவது ஆண்டுவிழா, திருநெல்வேலி தினத்தையொட்டி ‘நம்ம நெல்லை’ என்ற பெயரில் செல்பி
பாயின்ட்டை திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சுரேஷ்குமாா் திறந்தாா். ஆண்டு விழா சலுகையாக வெள்ளிக்கிழமை (செப்.3) ஒவ்வொரு பட்டு சேலைக்கும் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும் என
தி சென்னை சில்க்ஸ் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், தி சென்னை சில்க்ஸ் நிா்வாக இயக்குநா் வினித்குமாா், பொது மேலாளா் அருண்குமாா், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை மேலாளா்கள் பங்கேற்றனா்.