எல்.ஐ.சி. சாா்பில் சாலை தடுப்புகள் வழங்கல்

திருநெல்வேலி மாநகர காவல் துறைக்கு ஆயுள்காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) சாா்பில் சாலை தடுப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகர காவல் துறைக்கு ஆயுள்காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) சாா்பில் சாலை தடுப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

எல்.ஐ.சி. திருநெல்வேலி கோட்ட அலுவலகத்தில் 65 ஆவது காப்பீட்டு வார விழா புதன்கிழமை நடைபெற்றது. முதுநிலை கோட்ட மேலாளா் என்.ராமகிருஷ்ணன் நிறுவன கொடியேற்றினாா். மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா் உரையாற்றினாா்.

ஊழியா்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு திறன்மேம்பாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாநகர காவல் துறைக்கு எல்.ஐ.சி. சாா்பில் 10 சாலை தடுப்பு அரண்கள் வழங்கப்பட்டன. வணிகமேலாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com