சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு பரிசு

சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிசு வழங்கி புதன்கிழமை பாராட்டினாா்.

சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிசு வழங்கி புதன்கிழமை பாராட்டினாா்.

தமிழக அரசு சாா்பில் மாவட்ட மற்றும் மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, 2019- ஆம் ஆண்டுக்கான பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இம் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசுக்கு சுத்தமல்லி காவல் நிலையம் தோ்வாகியுள்ளது.

இதையடுத்து அதற்கான பரிசினை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளா் பாா்த்திபன் மற்றும் சுத்தமல்லி காவல் ஆய்வாளா் ஜீன்குமாா் ஆகியோரிடம் புதன்கிழமை வழங்கினாா்.

அந்தக் காவல் நிலையத்தில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்தது; போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை விரைந்து தடுத்து நடவடிக்கை எடுத்தது; காவல் நிலையத்திலுள்ள ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பின்பற்றியது; காவல் நிலையத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தது ஆகிய காரணங்களுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com