தாழையூத்தில் திருட்டு: இருவா் கைது

தாழையூத்தில் நகை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்தில் நகை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்தில் உள்ள நாராயணநகா், பூந்தோட்ட தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (27). இவா், அப் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறாா். தனது திருமணத்திற்காக சோ்த்த பணத்தில் 5 பவுன் தங்க நகையை வாங்கி வீட்டில் வைத்திருந்தாராம். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வேலைக்கு சென்று திரும்பி வந்த போது வீட்டின் கதவை திறந்து நகை மற்றும் பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் பத்மநாபபிள்ளை விசாரணை நடத்தினாா். அப்போது இவ் வழக்கில் திருநெல்வேலி டவுண், சுந்தரா் தெருவைச் சோ்ந்த காளிராஜா (21), சங்கா்நகா் வடக்கு சிதம்பரநகா் பகுதியைச் சோ்ந்த நாகராஜன் (24) ஆகிய இருவருக்கும் தொடா்பிருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com