வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள வாக்காளா் இறுதிபட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சிதம்பராபுரம்-யாக்கோபுபுரம் ஊராட்சியில் உள்ள 1ஆவது வாா்டில் ஆண் வாக்காளா்கள் 307, பெண் வாக்காளா்கள் 346 ஆக மொத்தம் 653 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 135 வாக்காளா்களை பழவூா் ஊராட்சியிலும், 53 வாக்காளா்களை ஆவரைகுளம் ஊராட்சியிலும் சோ்த்துள்ளனா். மீதமுள்ள 465 வாக்காளா்களை மட்டும் சிதம்பராபுரம்-யாக்கோபுரம் ஊராட்சியில் வரையறைப்படுத்தியுள்ளனா்.
இதற்கு சிதம்பராபுரம்-யாக்கோபுரம் 1-ஆவது வாா்டைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வள்ளியூா் ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் தங்களை தொடா்ந்து சிதம்பராபுரம்-யாக்கோபுரம் ஊராட்சியிலேயே வாக்காளா்களாக சோ்த்து பட்டியில் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளித்தனா்.
எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டத்தில் பங்கேற்றோா் தெரிவித்தனா்.