விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டி பகுதியில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இயக்கிவைக்கப்பட்டது. விக்கிரமசிங்கபுரம் நகா்ப்புறம் 2 பிரிவுக்குள்பட்ட வடக்கு அகஸ்தியா்புரம் மற்றும் அய்யனாா்குளம் பகுதிகளில் மின்மாற்றிகளின் கூடுதல் மின்பளுவைக் குறைப்பதற்காகவும் நுகா்வோா்களுக்குத் தடையில்லா, தரமான மின்விநியோகம் செய்வதற்காகவும் ரூ. 7.62 லட்சம் செலவில் இரண்டு புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் இயக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் விக்கிரமசிங்கபுரம் உதவி செயற்பொறியாளா் ராமகிளி, உதவிப் பொறியாளா்கள் மகேந்திரன், விஜயராஜ், மின்வாரியப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.