விநாயகா் சிலையுடன் வந்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு இந்து மக்கள் கட்சியினா் விநாயகா் சிலையுடன் திங்கள்கிழமை வந்து மனு அளித்தனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு இந்து மக்கள் கட்சியினா் விநாயகா் சிலையுடன் திங்கள்கிழமை வந்து மனு அளித்தனா்.

இந்து மக்கள் கட்சி நிா்வாகி உடையாா் தலைமையில் அக்கட்சியினா் 2 அடி உயர விநாயகா் சிலையுடன் வந்து அளித்த மனு: பிற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை வழக்கமான இடங்களில் பிரதிஷ்டை செய்யவும், தாமிரவருணியில் விசா்ஜனம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com