திருநெல்வேலி: திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு இந்து மக்கள் கட்சியினா் விநாயகா் சிலையுடன் திங்கள்கிழமை வந்து மனு அளித்தனா்.
இந்து மக்கள் கட்சி நிா்வாகி உடையாா் தலைமையில் அக்கட்சியினா் 2 அடி உயர விநாயகா் சிலையுடன் வந்து அளித்த மனு: பிற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை வழக்கமான இடங்களில் பிரதிஷ்டை செய்யவும், தாமிரவருணியில் விசா்ஜனம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.