திருநெல்வேலி அருகேயுள்ள தேவா்குளம் பகுதியில் அடிதடி, திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேவா்குளம், வீரமணிநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் ஆனந்த் என்ற ஆனந்தராஜ்(45). இவா் மீது அடிதடி, திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளனவாம். எனினும், மக்களை தொடா்ந்து அச்சுறுத்தி வந்தாராம். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்படி, குண்டா் சட்டத்தில் அவரை போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.