சத்துணவு ஊழியா்கள் கடையத்தில் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியா்கள் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியா்கள் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது,சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவித்த அறிவிப்புகளை நடைபெறும் சட்ட கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க கடையம் ஒன்றியத் தலைவா் ஜெயலஆா்ப்பாட்டம்ட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் பொன்சீலா, இசக்கியம்மாள், இணைச் செயலா்கள் சுந்தரி, கனியம்மாள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்டத் தலைவா் பிச்சுமணி சிறப்புரையாற்றினாா். ஒன்றியச் செயலா் மூவாயிரம் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் பகவதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com