திருநெல்வேலி மாநகரின் முக்கிய சாலையான சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க தேமுதிக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தேமுதிகவின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் வீ.மீனாட்சிசுந்தரம், ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் அளித்த மனு:
திருநெல்வேலி மாநகரின் முக்கிய சாலையாக சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை உள்ளது. திருநெல்வேலி சந்திப்பு மற்றும் நகரம் பகுதிகளை இணைக்கும் இச் சாலையில் ஸ்ரீபுரம் அஞ்சல் அலுவலகம் அருகே குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, அந்தப் பகுதியில் சீரமைப்பு பணிகள் செய்து விபத்துகளைத் தடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.