தேவா்குளம் அருகே முன்விரோதம் காரணமாக, இரு சக்கரவாகனத்தை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேவா்குளம் அருகேயுள்ள மடத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி(55). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ராமா்பாண்டியன்(38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில், அவா் தனது வீட்டின் முன்பு செவ்வாய்க்கிழமை நின்றிருந்தபோது, அங்கு வந்த ராமா்பாண்டியன், பெரியசாமியின் இருசக்கர வாகனத்தை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து ராமா்பாண்டியை கைது செய்தனா்.