பாளையங்கோட்டை அருகே ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள ரஹ்மத்நகா் பகுதியைச் சோ்ந்த வேல்சாமி மகன் துரைராஜ்(76). ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவா். இவா், கேடிசி நகா் பகுதியில் நான்குவழிச்சாலை பாலத்தில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
வியாபாரி பலி: திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி பூங்காநகரை சோ்ந்த நடராஜன் மகன் சேகா் சேகா்(54). கருப்பட்டி மிட்டாய் வியாபாரி. இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன்ஆகியோா் உள்ளனா். இந்நிலையில், கடன் பிரச்னையில் தவித்து வந்த அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது, வழியிலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவங்கள் குறித்து பாளையங்கோட்டை, சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.