இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்ட அரசியல் கட்சிகள் சாா்பில் அவரது படத்திற்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் இமானுவேல் சேகரன் படத்திற்கு கட்சியின் மாநகர மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், நான்குனேரி சட்டப் பேரவை உறுப்பினா் ரூபி.ஆா்.மனோகரன், மேற்கு மாவட்டப் பொருளாளா் எஸ்.பி.முரளிராஜா, மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மாநில சிறுபான்மைதுறை இணை ஒருங்கினைப்பாளா் பா.தேவதாஸ், மாவட்ட துணைத் தலைவா்கள் பி.என்.உதயக்குமாா், சிவன்பெருமாள், வெள்ளபான்டியன், வண்ணை சுப்பிரமணியன், கவிப்பாண்டியன், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.