மேலப்பாளையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கக்கோரி மனு

மேலப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலப்பாளையம் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜமாத் சாா்பில் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரனிடம் அளிக்கப்பட்ட மனு: மேலப்பாளையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோா் பேருந்துகளில் ஏறி-இறங்கிச் செல்கிறாா்கள். ஆனால், இங்கு போதிய பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

இந்நிலையில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப் பணிகளை ஏற்கெனவே திட்டமிட்ட இடத்தில் விரைவாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பயக11ஙஅசம: திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரனிடம் மனு அளிக்க வந்த அனைத்துக் கட்சியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com