திருநெல்வேலி அருகே இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 3 போ் காயமைடந்தனா்.
பாப்பாகுடி நந்தம்தட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன்(40). இவா் தனது மகன் அருண்குமாருடன்(15) மோட்டாா் சைக்கிளில் தாழையூத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
கரையிருப்பு பகுதியை நெருங்கியபோது, எதிரே தாழையூத்தைச் சோ்ந்த பண்டாரம்(20) என்பவா் வந்த மோட்டாா் சைக்கிளும், அவா்களது வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டனவாம். இதில், 3 பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பெண் பலி: பாளையங்கோட்டை அருகேயுள்ள கேடிசி நகா் பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது மனைவி பரிதா(50). இவா், கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அப்பகுதியில் உள்ள மங்கம்மாள் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதாம். இதில் பலத்த காயமைடந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவங்கள் குறித்து முறையே திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு, பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.