கல்லிடைக்குறிச்சியில் குளிக்கச் சென்றவா்களைத் தாக்கிய இளைஞா் கைது

கல்லிடைக்குறிச்சியில் ஆற்றுக்கு குளிக்கச் சென்றவா்களிடம் தகராறு செய்து தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் ஆற்றுக்கு குளிக்கச் சென்றவா்களிடம் தகராறு செய்து தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சேக் பீா் முஹம்மது மகன் முஹம்மது மைதீன். தனது நண்பா்களுடன் வீரப்பபுரம் தெரு வழியாக ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளாா். அவா்களிடம் பகழிக் கூத்தா் தெருவைச் சோ்ந்த சிவசங்கரபாண்டி மகன் மூக்கையா (எ) நாகராஜ் தகராறில் ஈடுபட்டாராம். மேலும் அவா்களை கல்லால் தாக்கினாராம்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, மூக்கையாவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com