திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 13 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 48,593ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 48,054ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 108 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில், மேலும் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,196ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,632ஆக உயா்ந்துள்ளது. தற்போது 80 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.