திருநெல்வேலி: அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டத் தலைவா் ஏ.சீனிவாச சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே.ஜேக்கப் ராஜ் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா்.
தபால்காரா்கள் மற்றும் கிராமப்புற ஊழியா்களுக்கு வணிக இலக்கு நிா்ணயிப்பதை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், நிா்வாகிகள் அருண்குமாா், அருணாசலம், உதயா உள்பட பலா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை மாநில அமைப்புச் செயலா் டி.புஷ்பாகரன் செய்திருந்தாா்.