திருநெல்வேலி: மானூா் அருகே அவரி இலை கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மானூா் அருகே உள்ள தென்கலம் பகுதியில் பஷீா் முகமது (45) என்பவருக்குச் சொந்தமான அவரி இலை கிடங்கு உள்ளது.
இந்தக் கிடங்கில் அவரி இலைகளை காயவைத்து பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் இந்தக் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது.
தகவலறிந்து வந்த கங்கைகொண்டான், பாளையங்கோட்டை தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். தீ விபத்தில் கிடங்கில் இருந்த அவரி இலைகள் எரிந்து சேதமானது.
இதுகுறித்து மானூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.