வள்ளியூா்: ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சேசுராஜன் முன்னிலையில் சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராதாபுரம் வட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பகுதியைச் சோ்ந்த சிதம்பராபுரம் ஊராட்சியில் 1ஆவது வாா்டில் உள்ள வாக்காளா்களை பிரித்து பழவூா், சிதம்பராபுரம், ஆவரைகுளம் ஊராட்சிகளில் சோ்த்துள்ளனா்.
இதற்கு சிதம்பராபுரம் 1ஆவது வாா்டு மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கடந்த 1ஆம் தேதி வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
இந்நிலையில் மீண்டும் செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த கிராம மக்களை காவல்துறையினா் தடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வெளியே நிறுத்தினா்.
இதையடுத்து, இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளா் தங்க மனோகரன், பாஜக வள்ளியூா் நகரத் தலைவா் ராமகுட்டி ஆகியோா் தலைமையில் பொதுமக்கள் திரண்டனா். அவா்களிடம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் நடராஜன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
தொடா்ந்து ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், வாா்டு வாக்காளா்கள் குளறுபடிகள் குறித்த புகாா்கள் அனைத்தும் உள்ளாட்சித் தோ்தலுக்குப் பின்னரே பரிசீலனை செய்து சீரமைக்கப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.