வள்ளியூா்: வள்ளியூா் அருகே துலுக்கா்பட்டி கிராமத்தில் எஸ்.டி.பி.ஐ மற்றும் இம்தாத் இந்தியா அமைப்பு சாா்பில் குடும்ப அட்டை திருத்தம் முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு நிஜாம் தலைமை வகித்தாா். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராதாபுரம் தொகுதி தலைவா் தௌபிக் அக்பாஷா முகாமை தொடங்கிவைத்தாா். இம்தாத் இந்தியா அமைப்பைச் சோ்ந்த அன்சாரி கணினி மூலமாக பெயா், முகவரி திருத்தம் மேற்கொண்டாா். துலுக்கா்பட்டி கபூா் நன்றி கூறினாா்.
இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு குடும்ப அட்டையில் திருத்தங்களை செய்தனா்.