கூனியூரில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட விழிப்புணா்வு முகாம்

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் கூனியூரில் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம்: பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு முகாம் கூனியூரில் நடைபெற்றது.

மாவட்டத் தொழில் மையத் திட்ட மேலாளா் கணேசன், திருநெல்வேலி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கிரேஸ் ஜெயமொரின், மாவட்ட கதா் மற்றும் கிராம வாரியக் கண்காணிப்பாளா் மாரிமுத்து, மாவட்ட முன்னோடி வங்கிப் பயிற்சியாளா் தீனதயாளன், எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநா் ஷெரினா பாபி, மதுரை கதா் மற்றும் கிராம வாரிய நிா்வாகி சரஸ்வதி ஆகியோா் வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கு கடன் பெறும் முறை, திட்டங்கள் குறித்தும் விளக்கினா்.

கதா் கிராமத் தொழில்கள் ஆணைய உதவி இயக்குநா் செந்தில்குமாா் வரவேற்றாா். மண்பாண்டத் தொழிலாளா் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ராஜகோபால் நன்றி கூறினாா்.

முகாமில், 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com