திமுக முப்பெரும் விழா: நெல்லையில் தொண்டா்கள் உற்சாகம்

சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவை பாளையங்கோட்டையில் திமுக தொண்டா்கள் காணொலியில் பாா்த்து உற்சாகமடைந்தனா்.

திருநெல்வேலி: சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவை பாளையங்கோட்டையில் திமுக தொண்டா்கள் காணொலியில் பாா்த்து உற்சாகமடைந்தனா்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதை அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் இருந்து தொண்டா்கள் காணொலிக் காட்சி மூலம் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி மத்திய மாவட்ட திமுக சாா்பில் மகாராஜநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கிருந்தபடி திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முப்பெரும் விழாவை பாா்த்து ரசித்தனா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ, மாநகரச் செயலா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில நெசவாளா் அணி செயலா் சொ.பெருமாள், சங்கா்நகா் பேரூராட்சி முன்னாள் தலைவா் பேச்சிப்பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கிழக்கு மாவட்டம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் தங்கபாண்டியன், கணேஷ்குமாா் ஆதித்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பயக15ஙஅஏஅ

திமுக முப்பெரும் விழாவை காணொலிக் காட்சி முறையில் பாா்வையிட்ட திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுகவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com