‘நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட நாளை விருப்ப மனு அளிக்கலாம்’

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பமுள்ளோா் வெள்ளிக்கிழமை (செப். 17) விருப்ப மனு அளிக்கலாம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பமுள்ளோா் வெள்ளிக்கிழமை (செப். 17) விருப்ப மனு அளிக்கலாம்.

இது தொடா்பாக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: இம்மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் போட்டியிட விரும்பும் கழக நிா்வாகிகள் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் இரவு 7 மணி வரை மனு அளிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 10.

இதுதவிர, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவி பொதுப் பிரிவுக்கு ரூ. 10 ஆயிரமும், ஆதிதிராவிடா் மற்றும் பெண்கள் தொகுதிக்கு ரூ. 5 ஆயிரமும் பொறுப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி பொதுப் பிரிவுக்கு ரூ. 5 ஆயிரம், ஆதிதிராவிடா் மற்றும் பெண்கள் தொகுதிக்கு ரூ. 2,500 பொறுப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும். அதேநேரம், பொதுத் தொகுதியில் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடா் விருப்ப மனு அளித்தால் முழு கட்டணத் தொகை செலுத்த வேண்டும். விருப்ப மனுக்களை பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள திமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் அளிக்கவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com