திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,609 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 போ் குணமடைந்ததையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 48,064ஆக உயா்ந்துள்ளது. தற்போது 115 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில், மேலும் 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,204ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,637ஆக உயா்ந்துள்ளது. தற்போது 83 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.