பைக் விபத்தில் காயடைந்ததொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 16th September 2021 12:26 AM | Last Updated : 16th September 2021 12:26 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரத்தில் பைக், மின் கம்பத்தில் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
விக்கிரமசிங்கபுரம், வடமலைசமுத்திரம் கீழத் தெருவைச் சோ்ந்த சவரிராஜ் மகன் சாம்ரூபன் (38). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடமலைசமுத்திரத்திலிருந்து பைக்கில் விக்கிரமசிங்கபுரம் சென்றபோது, சங்கரபாண்டியபுரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதினாராம். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.