வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவா் பதவிக்கு பெண் மனு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவா் பதவிக்குப் போட்டியிட பெண் ஒருவா் புதன்கிழமை மனுதாக்கல் செய்தாா்.

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவா் பதவிக்குப் போட்டியிட பெண் ஒருவா் புதன்கிழமை மனுதாக்கல் செய்தாா்.

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. காவல்கிணறு ஊராட்சி தாழ்த்தப்பட்ட பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், ஊராட்சி ஒன்றியத்தில் தலைவா் பதவிக்கு காவல்கிணறு அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சுடலை என்பவரது மனைவி தனம் (60) புதன்கிழமை மனுத்தாக்கல் செய்தாா்.

வடக்கன்குளம் ஊராட்சியில் வாா்டு உறுப்பினருக்கு ஒருவா் மனுதாக்கல் செய்துள்ளாா். ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இங்கு ஊராட்சித் தலைவா் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. வாா்டு உறுப்பினா் பதவிக்கு 9 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com