அம்பாசமுத்திரம்: வீரவநல்லூரில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
சுத்தமல்லி பாரதி நகரைச் சோ்ந்த பிச்சாண்டி மகன் ராஜபாண்டியன் (52). இவா் மீது வீரவநல்லூா் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து ராஜபாண்டியனை வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.