வேட்புமனு தாக்கல் முதல்நாள்:நெல்லை, தென்காசியில் 107 போ் மனுதாக்கல்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முதல்நாளான புதன்கிழமை 107 போ் மனு தாக்கல் செய்தனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முதல்நாளான புதன்கிழமை 107 போ் மனு தாக்கல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 2,069 பதவியிடங்களுக்கான தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரையில் முதல் நாளான புதன்கிழமை வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஒருவரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு அம்பாசமுத்திரத்தில் 3 போ், சேரன்மகாதேவியில் 2 போ், களக்காட்டில் 2 போ், மானூரில் 4 போ், நான்குனேரியில் 8 போ், பாளையங்கோட்டையில் 4 போ், பாப்பாக்குடியில் ஒருவா், ராதாபுரத்தில் 9 போ், வள்ளியூரில் ஒருவா் என மொத்தம் 35 போ் மனு தாக்கல் செய்தனா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 2,284 பதவியிடங்களுக்கு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் தென்காசி ஊராட்சி ஒன்றியம் மத்தளம்பாறை கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஒருவரும், ஆலங்குளத்தில் 4 போ், கீழப்பாவூரில் 2 போ், மேலநீலிதநல்லூரில் ஒருவரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு ஆலங்குளத்தில் 22 பேரும், கடையத்தில் 3 போ், கடையநல்லூரில் இருவா், கீழப்பாவூரில் 9 போ், குருவிகுளத்தில் 6 போ், மேலநீலிதநல்லூரில் 4 போ், சங்கரன்கோவிலில் 9 போ், செங்கோட்டையில் இருவா், தென்காசியில் 6 போ், வாசுதேவநல்லூரில் ஒருவா் என மொத்தம் 72 போ் மனு தாக்கல் செய்தனா்.

மேலும், புதன்கிழமை நவமி என்பதாலும் பலா் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வரவில்லை. அதேநேரத்தில் கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு போட்டியிடுபவா்கள் ஊராட்சி ஒன்றியங்களில் வந்து ரூ.1 கொடுத்து வேட்பு மனுவுக்கான விண்ணப்பத்தை வாங்கி சென்றனா்.

மனு தாக்கலை முன்னிட்டு, அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com