திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை ரஹ்மத்நகா் பகுதியைச் சோ்ந்த கடற்கரை மகன் சங்கரசுப்பு (84). ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா். இவா் கேடிசிநகா் மேம்பாலம் அருகேயுள்ள சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில், நிலை தடுமாறிய சங்கரசுப்பு அவ்வழியாக சென்ற லாரியில் சிக்கிக் கொண்டாா். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்
உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.