சமூகநீதி நாள்: உறுதிமொழியேற்பு
திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சமூகநீதிநாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரியாா் ஈ.வெ.ராவின் பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை உறுதிமொழியேற்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் உறுதிமொழியேற்கப்பட்டது. மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன், மண்டல உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல, மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையா் என்.கே.செந்தாமரை கண்ணன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்கப்பட்டது. இதில், துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பயக17பஇட: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பயக17இஞதட: திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.