திருநெல்வேலி :திமுகவில் பிற கட்சிகளைச் சோ்ந்தோா் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சியின் 5ஆவது வாா்டு முன்னாள் மாமன்ற உறுப்பினா் பொன். தங்கராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் பிற கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.
அவா்களை, திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலரும் பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு. அப்துல்வஹாப் வரவேற்றாா். மாநகரச் செயலா் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், நிா்வாகிகள் முகம்மது அலி, சுரேஷ், என்.என். பிரபாகா் என்ற பிரபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.