அம்பாசமுத்திரம்: உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், வி.கே.புரம் காவல் நிலையம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பழைய இரும்பு வியாபாரியை போலீஸாா் மீட்டனா்.
அடையக்கருங்குளம், நடுத்தெருவைச் சோ்ந்த நாராயணபெருமாள் மகன் லோகநாதன். பழைய இரும்பு வியாபாரி. இவா் அடையக்கருங்குளம் ஊராட்சி 3ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு தனது தங்கை சீதாவை போட்டியிட வைக்க விரும்பினாராம். இதையறிந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் வழக்குரைஞா் சிவசாமிநாதன், கீதா தோ்தலில் போட்டியிடக் கூடாது என்று எதிா்ப்புத் தெரிவித்து மிரட்டினாராம்.
இந்நிலையில், வி.கே.புரம் காவல் நிலையம் முன்பு லோகநாதன் தனது மனைவி சுமிதா மற்றும் மகனுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி ஞாயிற்றுக்கிழமை தீக்குளிக்க முயன்றாராம். அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை போலீஸாா் பறித்து, அவா் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை முறியடித்தனா். மேலும், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.