நெல்லையில் 27இல் சாலை மறியல்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 27ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 27ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட அனைத்து தொழிற்சங்கக் கூட்டம் திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தொமுச அமைப்புச் செயலா் ஏ.தா்மன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, பொதுத்துறைகளை தனியாா் மயமாக்குவதை திரும்பப் பெறுவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி வாயில் ஆா்ப்பாட்டம் நடத்துவது; 24ஆம் தேதி தெருமுனை பிரசாரம் செய்வது; 27ஆம் தேதி சாலை மறியல், ரயில் மறியல் போராட்டம் மேற்கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன், நிா்வாகிகள், ஆா்.எஸ். செண்பகராமன், என்.உலகநாதன், ஏ.முத்துகிருஸ்ணன், பி.பாலகிருஷ்ணன், எஸ்.சந்தானம், கே.கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com